Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஆங்கவர்க்கு நுட்பஞ்சே ரவவுயிரிற் சிததத்தா 
லோங்க வரும்வருத்த முற்றுமிகும் – பாங்கதனிற்
றோன்றா வுயிர்க்கதிதான் றுக்க மிகுத்துடலி
லேன்றாருக கெயதவரி திங்கு.      12.5

ஆங்கவர்க்கு

அந்தக் கைவல்யநிஷ்டர்களுக்கு

நுட்பம் சேர் அவ்வுயிரின் சித்தத்தால்

மிகவும நுண்ணியதான அந்த ஜீவாத்மாவில் நெஞ்சு செலுத்துவதால்

முற்று மிகும் வருத்தம் ஓங்க வரும்

மிக அதிகமான வருத்தம் மேன்மேலும் வரும்

உடலில் ஏன்றாருக்கு

உடலில் பற்றுள்ளவர்களுக்கு

பாங்கு அதனில் தோன்றா உயிரக்கதிதான

மிக நுண்ணியதாயிருக்கையாலே அறிய அரிதாயிருக்கிற ஜீவாத்மாவைப் பற்றிய மனநிலை

இங்கு

இவ்வுலகில்

துக்கம் மிகுத்து எய்த அரிது

மிகுந்த சிரமப்பட்டும் அடைய அரிதாயிருக்கும் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top