Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இவ்வா றியம்பு மிகலரச னுண்மகிழ 
தெவ்வார் குருமுதலாஞ் சீர்பாட்ட-னெவ்வாறுஞ் 
சிங்க வரவஞ் செலுத்தினான் வீடுமனற் 
சங்கு முழங்குவித்தான் றான்.   1.10

இவ்வாறு இயம்பும்

இகல் அரசன்

வேக படை நடப்பில் எல்லாம் வியந்து

வலிமிக்க அரசனான துரியோதனன்

உள்மகிழ

ஸந்தோஷப்படும்படியாக

தெவ்வார் குரு முதலாம் சீர் பாட்டன் வீடுமன்

வீரம் நிறைந்த, குருக்களிற் சிறந்த, குணம் மிக்க பாட்டனான பீஷ்மர்

எவ்வாறும் சிங்க அரவம் செலுத்தினான்

எல்லாப்புறத்திலும் தன் சிங்கநாதத்தை ஒலிக்கச் செய்தான்;

தான்

தானே

நல் சங்கு முழங்குவித்தான்

தன்நுடைய நல்ல சங்கை முழங்கச்செய்தான்

பின்னும் பலசங்கம் பேரி பெருமுரசு  துன்னும் பணவமுதற் றொல்லியங்கள் பன்னி  யறைந்தெழுந்த வந்தவொலி மேலாகு மாழி  நிறைந்தெழுந்த பேரொலிபோ னின்று.

பின்னும் பல சங்கம் பேரி பெருமுரசு துன்னும் பணவம் முதல் தொல்லியங்கள்

மேலும் பல சங்கங்களும், பெருமுரசங்களும், பணவம் முதலான வாத்தியங்களும்

அறைந்து எழுந்த

பலதரம் ஒலித்து எழுந்தன

அந்த ஒலி

அந்த சப்தம்

மேல் ஆகும் ஆழி நிறைந்து எழுந்த பேர் ஒலி

மேலான கடல் நிறைந்து எழுந்ததானாலுண்டான

போல் நின்று

பெருமுழக்கம் போல் நின்று ஒலித்தது

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top