Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

நன்றுந்தீ துங்கலந்து நண்ணும் பலமூன்றா
யொன்றுந் துறவா துடன்சென்றார்க் – கென்றுங்
கருமத்தி லொன்றிக் கருதுபயன் சாரா
தொருமைப் படத்துறந்தார்க் குற்று.       18.12

கருமத்தில் ஒன்றி

கர்மானுஷ்டானத்தில் பொருந்தி

துறவாது உடன் சென்றார்க்கு

மூன்று வகைப்பட்ட த்யாகங்களைச் செய்யாமலிருப்பவர்களுக்கு

நன்றும்

ஸ்வர்க்கம் முதலான இன்பம்தரும் பலன் என்றும்

தீதும்

நரகம் முதலான துன்பம் தரும் பலன் என்றும்

கலந்து நண்ணும் பலம்

'புத்திரன் பசு முதலான இன்பதுன்பங்களைக் கலந்து தரும் பலன்' என்றும்,

மூன்றாய் ஒன்றும்

மூன்று விதமான பயன்களும் உண்டாகும்

என்றும்

எப்போதுமே

ஒருமைப்படத் துறந்தார்க்கு

பலத்தையும் ஸங்கத்தையும் கர்த்ருத்வத்தையும் ஒன்றாகக் கைவிட்டவர்களுக்கு

கருது பயன் உற்று சாராது

(முற்கூறிய) மூன்று பயன்களும் வந்தடையமாட்டா

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top