Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

நானமர்ந்து நின்றுலகி னாடு முயிருடலி
லூன மறவளரு மொள்ளெரியாத் – தான்கலவா
வேல்வகைசேர் வாயு விரண்டா லறப்புசிப்ப
னால்வகைசே ரன்னத்தை நன்கு.       15.14

நான்

நான்

உலகில் நாடும் உயிர் உடலில்

உலகில் உள்ள ஜீவர்களின் உடலில்

ஊனம் அற வளரும் ஒள் எரியா அமர்ந்து நின்று

குறைவில்லாமல் வளர்ந்துவரும் ஜாடராக்னி எனும் நெருப்பாகப் பொருந்தி நின்று

நால் வகை சேர் அன்னத்தை

கடித்தும் உறிஞ்சியும் நக்கியும் குடித்தும் உண்ணப்படும் நாலுவகைப்பட்ட உணவை

நன்கு தான் கலவா

நன்றாகக் கலந்து

ஏல்வகை சேர் வாயு இரண்டால்

வ்ருத்தி ரூபமாகச் சேர்ந்த ப்ராணன் அபானன் ஆகிய இரு வாயுக்களோடு கூடியவனாய்

அற புசிப்பன்

ஜீர்ணமாகும்படி உண்கிறேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top