Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

புன்பொருளை யுள்ளும் புமானுக் கதிற்சங்கம்
பின்பதனாற் காமமதற் பின்வெகுளி -யன்பதனான்
மோகமதிற் பொன்று மிருதியதிற் புத்தியழி
வாகுமதிற் றானசிக்கு மாங்கு.     2.57

புன் பொருளை

( என்னை தியானிக்காமல் ) தாழ்ந்தவையான சப்தாதி விஷயங்களையே

உள்ளும்

தியானிக்கும்

புமானுக்கு

புருஷனுக்கு

அதில் சங்கம்

அவ்விஷயங்களில் பற்று (ஏற்படுகிறது.)

பின்பு

பிறகு

அதனால் காமம்

அப்பற்றினால் காமம் (ஏற்படுகிறது;)

பின்

அதற்குப்பின்

அதில்

அக்காமததால்

வெகுளி

கோபம் (உண்டாகிறது;)

அன்பதனால்

காமத்தினால் உண்டாகும் அக்கோபத்தால்

மோகம்

பகுத்தறிவின்மை (உண்டாகிறது)

அதில்

அப் பகுத்தறிவின்மையாலே.

மிருதி

நினைவு

பொன்றும்

அழியும்

அதில்

அந்த நினைவழிவாலே

புத்தியழிவு ஆகும்

புத்தியழிவு ஏற்படும்.

ஆங்கு

அந்நிலையிலே

அதில்

அப் புத்தியழிவாலே

தான் நசிக்கும்

(ஸம்ஸாரத்தில் மூழ்கி) இவ்வாத்மாவே அழிந்துவிடும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top