Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

அற்றமுரைக்கி லதுகேண்மி னம்புயத்தாள்
கொற்றவனை நெஞ்சிற் குடியிருத்தி – மற்றொன்றை
யத்தியா தொன்று மவன்பா னலம்புனைதல்
பத்தியோ கத்தின் படி.     0.11

அற்றம் உரைக்கில்

உண்மையை உரைக்கச் சொன்னால்

அது கேண்மின்

அதைச் சொல்கேன் கேளுங்கள்

அம்புயத்தாள் கொற்றவனை

லக்ஷ்மீநாதனை

நெஞ்சில் குடியிருத்தி

நெஞ்சில் அமைத்து

மற்றொன்றை அ(ர்)த்தியாது

வேறு பலன்களை விரும்பாமல்

ஒன்றும அவன் பால்

தம்மிடம் பொருந்தும் அவனிடம்

நலம் புனைதல்

தியானம் அர்ச்சனம் முதலானவற்றைச் செய்வது

பத்தியோகத்தின் படி

பக்தியோகத்தின் ஸ்வரூபமாகும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top